
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவை என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அரசியல் தலைமை, ராணுவத்துக்கு இடையே மிக நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் போரின்போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்களிலும் இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.