• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டுபோல் காய் நகர்த்தியதாகக் கூறியுள்ளார் ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி.

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சதுரங்க விளையாட்டுபோல் நடத்தினோம். அதில் எதிரியின் அடுத்த நகர்வு என்னவென்பது தெரியாது அல்லவா?. அதுபோலவே பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யும் என்று எங்களுக்குத் தெரியாது. நமது நகர்வுகள் அவர்களுக்குத் தெரியாது. இதை ‘க்ரே ஜோன்’ என்போம். க்ரே ஜோனில், வழக்கமான போர் நடவடிக்கைகள் இருக்காது. இந்தச் சூழலில் ஒரு செஸ் விளையாட்டைப் போலத்தான் களமாடினோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *