
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக, 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 390 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முடிச்சூர் ஊராட்சியும் அடங்கும். குறிப்பாக, 2015-ம் ஆண்டு முதல்,மழைக்காலங்களில் முடிச்சூர் ஊராட்சி பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் மழை காலங்களில் முடிச்சூர் பாதிக்கப்படுவது தடுக்கப்படவில்லை.