
பெங்களூரு: கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.