
சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.