• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி.​யின் பெரும்​பாலான மாவட்​டங்​களில் குரங்​கு​கள் தொல்லை என்​பது சாதா​ரண​மாக உள்​ளது. பிலிபித்​தின் பில்​சந்தா காவல் நிலை​யத்​தி​லும் குரங்​கு​களின் இது​போன்ற தொல்லை அதி​கரித்​துள்​ளது.

இதனை சமாளிக்க பில்​சந்தா போலீ​ஸார் ஒரு புதிய உத்​தியை கடைபிடித்து வரு​கின்​றனர். இவர்​கள் லங்​கூர் எனப்​படும் கருங்​குரங்கை காவல் நிலை​யத்​தில் கட்டி வைத்​துள்​ளனர். லங்​கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்​கு​கள் அச்​சப்​படும் என்​ப​தால் இவ்​வாறு செய்​துள்​ளனர். இந்​தக் குரங்கு சிலசம​யம் காவல் நிலைய ஆய்​வாளரின் மேசை​யிலும் சொகு​சாக அமர்ந்து பழங்​களை உண்​கிறது. இது தொடர்​பான வீடியோ பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *