
புதுடெல்லி: உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்குகள் தொல்லை என்பது சாதாரணமாக உள்ளது. பிலிபித்தின் பில்சந்தா காவல் நிலையத்திலும் குரங்குகளின் இதுபோன்ற தொல்லை அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்க பில்சந்தா போலீஸார் ஒரு புதிய உத்தியை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் லங்கூர் எனப்படும் கருங்குரங்கை காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர். லங்கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்குகள் அச்சப்படும் என்பதால் இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் குரங்கு சிலசமயம் காவல் நிலைய ஆய்வாளரின் மேசையிலும் சொகுசாக அமர்ந்து பழங்களை உண்கிறது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.