
சென்னை: நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால்தான் மாசு ஏற்படுமா, கழிவு நீர், ரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியவில்லையா, என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வந்தால்தான் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருப்பது வெளியில் தெரிகிறது. பொங்கலின்போது புகையில்லாத பண்டிகை என விளம்பரம் செய்வது போல, பக்ரீத்தின்போது ரத்தமில்லாத பண்டிகை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பேசுவதில்லை.