
சென்னை: புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது அவரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.