• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பு​திய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்​சு​வார்த்தை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது.

பிரதமர் மோடி அண்​மை​யில் தமிழகம் வந்​திருந்​த​போது அவரை சந்​திப்​ப​தற்​காக ஓ.பன்​னீர்செல்​வம் நேரம் கேட்​டிருந்​தார். ஆனால், அந்த சந்​திப்​புக்கு அனு​மதி கிடைக்​காத​தால் ஓபிஎஸ் தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதி​முக – பாஜக கூட்​டணி ஏற்​பட்ட பின்​பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்​கட்​டப்​பட்டு வரு​வ​தாக​வும், அவரது ஆதர​வாளர்​கள் தெரி​வித்து வந்​தனர். இந்​நிலை​யில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓ.பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *