
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவில், 9-வது நாளான நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாரதியார் பாடலை பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்தனர்.
இந்தியாவோடும், தமிழகத்தோடும் நெருங்கிய கலாச்சார தொடர்புகொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றன.