
சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது.