
கோவை: ‘பைக் டாக்ஸி’ மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
கோவை டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் புகார்கள் அடிப்படையில் கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் ந.அழகரசு உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கோவை (மையம்) விஸ்வநாதன் தலைமையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.