
புதுடெல்லி: “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது உண்மையென உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்குமாறாக அதிகரித்துள்ளது.