
சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழக தலைவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.