• August 8, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சீனி என்பவரின் விசைப்படகில் கடலுக்கு சென்ற தோபி யாஸ் (37), குரு சாமி (39), பரத் (31), ரவி (47), ஜோஸ் பாரதி (22), மரிய பிரவீன் (31), மனோ சந்தியா (32), பிலிப்பியர் (43), மேத்யூ கினலடன் (24), டேனியல் ராஜ் (33) ஆகிய 10 மீனவர்களை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் புதன்கிழமை காலையில் சிறைப்பிடித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *