• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூய்​மைப் பணியை தனி​யாரிடம் வழக்​கும் விவ​காரம் தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி ஆணை​யரிடம் விளக்​கம் கேட்​டு, தேசிய ஆதி​தி​ரா​விடர் ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், ஏற்​க​னவே 10 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி தனி​யாரிடம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது, ராயபுரம், திரு.​வி.க ஆகிய 2 மண்​டலங்​களில் குப்பை சேகரிக்​கும் பணியை தனி​யார் நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க மாநக​ராட்சி முடிவு செய்​துள்​ளது. தனி​யார்​மய​மாதலை கைவிடக் கோரி​யும், தற்​காலிக​மாக பணி​யாற்றி வரும் தூய்​மைப் பணியாளர்​களை, பணி நிரந்​தரம் செய்ய வலி​யுறுத்​தி​யும், ராயபுரம், திரு.​வி.க. நகர் மண்​டலங்​களை சேர்ந்த தூய்மை பணியாளர்​கள் 7-வது நாளாக நேற்​றும் வேலை நிறுத்​தம் மற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் நடத்தி வருகின்றனர். இவர்​களில் பலர் ஆதி​தி​ரா​விடர் சமூகத்தை சேர்ந்​தவர்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *