
சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளை ஊபர் செயலியில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஒரு வழித்தடத்தில் டிசம்பர் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கிவைத்தார்.