
புதுடெல்லி: “மகாராஷ்டிர தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர தேர்தலில் வாக்காளர் பட்டியலை அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. இவை எல்லாம் பெரும் சந்தேகத்தையும் தேர்தல் ஆணைய நடைமுறையின் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாக்குகின்றன.