
புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி நிறுவனங்கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்வாய்ஸ்) தயாரித்து முறைகேடான வழியில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.