
மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.
திருச்சி காஜா மலை பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்டலின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அதை காலி செய்யுமாறு ஓட்டல் நிர்வாகத்துக்கு சுற்றுலா துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி ஓட்டல் நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.