• August 8, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: வஞ்​சனை​யால் பாமகவை கைப்​பற்​றத் துடிக்​கிறார் அன்​புமணி என்று கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் நேற்று கூறிய​தாவது: தைலாபுரம் வரும் அன்​புமணி தாயை மட்​டும் பார்த்​து​விட்​டு, என்​னிடம் பேசாமல் செல்​கிறார். மாற்று கட்​சி​யில் இருந்து வந்த வழக்​கறிஞர் ஒரு​வர் என்னை ‘ராம​தாஸ்’ என்று அழைக்​கிறார். ‘அய்​யா’ என்று சொன்​னவர்​களை ராம​தாஸ் என்று சொல்​ல​வைத்​தது அன்​புமணி​தான்.

வஞ்​சனை, சூது ஆகியவை மூலம் பாமகவை கைப்​பற்​றி, ‘நான்​தான் இனி பாமக’ என்று சொல்​லத் துடிக்​கிறார் அன்​புமணி. அவரது தலை​வர் பதவி மே மாதத்​துடன் காலா​வ​தி​யாகி​விட்​டது. எனக்​குத் தெரி​யாமல் உள்​ளடி வேலை செய்​துள்​ளார். என் படத்​தைப் போட்டு, எனது ஆதர​வாளர்​களை அவர் பக்​கம் இழுக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *