
மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், “மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு 2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ.10 கோடியில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கட்டுமானப் பணியைத் தொடங்கப்படவில்லை. எனவே, எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தர விட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.