• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திமுக தலை​வரும் முன்​னாள் முதல்​வரு​மான கருணாநி​தி, 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி காலமா​னார். அவரது 7-ம் ஆண்டு நினை​வு​ தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.அதையொட்​டி, திமுக சென்னை மாவட்​டக் குழுக்​கள் சார்​பில் அண்​ணா சாலை​யில் நேற்று அமை​திப் பேரணிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பேரணிக்கு தலைமை வகித்தார்.

முன்னதாக அண்​ணா​சாலை ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் கருணாநிதி சிலையின் கீழ் அலங்​கரித்து வைக்கப்​பட்​டிருந்த உருவப்படத்துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினார். அதைத்​தொடர்ந்​து, திமுக பொதுச்​செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான துரை​முரு​கன், துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *