
மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றிவிட்டு, உள்ளாட்சி விதிப்படி பேரிகார்டுகள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாக பல மடங்கு அதகரித்துள்ளது. இதனால் ஏற்படும் வாகன நெரிசல் அதிகரித்து விபத்துகளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2022ல் 64,105 விபத்துகளில் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர், 67,703 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.