
சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிராக மனு கொடுத்த துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் வராததால், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 22, அதிமுக 7, காங்கிரஸ் 3, இந்திய கம்யூ., மதிமுக தலா 1, சுயேச்சை-2 வென்றிருந்தன. திமுகவைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், குணசேகரன் துணை மேயாகவும் உள்ளனர். மதிமுக கவுன்சிலர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடம் காலியாக உள்ளது.