
கோவை: கோவையில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அறையில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட கடைவீதி காவல் நிலையம் வைசியாள் வீதியில் இயங்கி வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு, விசாரணை பிரிவு, போக்குவரத்து ஆகிய காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.