
சென்னை: சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, லடாக் எல்லையில் இந்தியாவின் 2,000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டதாக ராகுல் கூறி இருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய்சங்கர் வத்சவா, லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.