• August 6, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது கடந்த தேர்தலில் திமுக அளித்தவாக்குறுதி. இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது அதை நிறைவேற்ற கிளம்பி இருக்கிறது ஆளும் கட்சி. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை… ஆனால், அதற்காக தேர்வு செய்திருக்கும் இடத்தை வைத்துத்தான் இப்போது சர்ச்சை.

​நாகர்​கோ​விலின் மையப்​பகு​தி​யில் உள்​ளது அனாதைமடம் மைதானம். திரு​வி​தாங்​கூர் மன்​னர் காலத்​தில் ‘அவிட்​டம் திரு​நாள் மைதானம்’ என்​றிருந்த இது அனாதைகள் தங்​கு​வதற்​காக​வும், இளைப்​பாறு​வதற்​காக​வும் மன்​னர்​களால் வழங்​கப்​பட்​டது. சுமார் 7 ஏக்​கர் பரப்​பளவி​லான இந்த மைதானம் தற்​போது மாநக​ராட்​சி​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. பொதுக்​கூட்​டங்​கள், பொழுது​போக்கு நிகழ்ச்​சிகள் நடத்த வாடகைக்கு விடு​வதன் மூலம் இந்த மைதானத்​தால் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.80 ஆயிரம் வரைக்​கும் வரு​மானம் ஈட்டி வரு​கிறது மாநக​ராட்​சி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *