
சென்னை எழும்பூர் ஈவெரா சாலை முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதார தலைமை பீடமாக சென்னை வளர்ந்தது.
காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் முதல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் சென்னை தான். ஐரோப்பியர்களின் வருகை, காலனி ஆதிக்கத்தின் சுவடுகளாக இன்றும் பாரம்பரிய கட்டிடங்கள் சென்னை மாநகரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. இக்கட்டிடங்கள் வரலாறு, சமூக கலாச்சார மதிப்பு, வடிவமைப்பு, கட்டுமான பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் கட்டிடக் கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.