
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுகே உள்ள திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 1 கி.மீ., உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர் இந்த அருவியை அடைகிறது. பின்னர் தோணி ஆற்றின் வழியாக கோயிலை அடைந்து திருமூர்த்தி அணையை சென்று சேர்கிறது.