• August 5, 2025
  • NewsEditor
  • 0

குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத் தைச் சேர்ந்த சுமித்ரா தேவி (67) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், எனது கணவர் லிங்கசாமி ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சொத்துதகரா றில் எனது கணவர் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 28 அன்று தலை துண்டித்து கொலை செய்யப்பட் டார். இந்த கொலைவழக்கில் எனது கணவரின் தம்பி தண்டபாணி கைது செய்யப்பட்டார். ஆனால் சந்தேக அடிப்படையில் விடுவிக்கப்பட் டார். ஜூலை 28 அன்று மாற்றுத் திறனாளியான வழக்கறிஞராக தொழில் செய்துவரும் எனது மகன் முருகானந்தத்தையும் தண்டபாணி கூலிப்படை மூலமாக எனது கணவர் இறந்த அதே தேதியில் கொலை செய்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *