
புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பியதையடுத்து நேற்று மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.