
புதுடெல்லி: ஓடிபி எண்ணைப் பயன்படுத்தி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்கக்கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது பொதுமக்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட விவரங்கள் மூலமாக ‘ஓடிபி’ எண்ணைப் பெறக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.