
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று மீண்டும் உறுதியாக கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பஹல்காமில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்தான். அவர்களில் ஒருவர் கூட உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அரசு ஆவணங்கள், பயோமெட்ரிக் தகவல்கள், வாக்காளர் அடையாள அட்டை, நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள், கராச்சியில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் போன்ற பல ஆதாரங்கள் உள்ளன.