
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.