
தூத்துக்குடி: தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’ நிறுவன தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். இதில் முதல்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு பணிகள் முடிந்து, கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.