
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தூத்துக்குடியில் 'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்னும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார்.