• August 4, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: காவல் துறையில் தேர்வாகி 2 ஆண்டாக பணி நியமன ஆணைக்கென காத்திருப்பதாக புதிய எஸ்ஐ-க்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

தமிழக காவல் துறையில் காலியிடங்களை நிரப்ப புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023 மே மாதம் வெளியானது. தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 26, 27-ம் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு நவம்பரில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு 2024 ஜனவரியில் நேர்காணல், சான்றிதழ்கள் சரிபார்த்தல் முடிந்து ஜன.30-ல் இறுதி ரிசல்ட் வெளியிடப் பட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் மருத்துவச் சோதனையில் தேர்வான சுமார் 750-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *