
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷிபு சோரன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஷிபு சோரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.