
விருதுநகர்: எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பாஜக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் பாரதி மகாலிலும், விருதுநகரில் எஸ்.எஸ்.கே. கிராண்ட் மகாலிலும் நடைபெற்ற கூட்டங்களுக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.