
திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் விவசாய பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இயற்கை விவசாயத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர். இந்த விவசாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.