
மதுரை: நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேணடும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.