
சென்னை: பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் பயணிகள் வாகன கண்காட்சி நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்களது கண்டுபிடிப்பான பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியிருந்தனர்.