
சென்னை: மதிமுகவின் போராட்டங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிந்த மறுநாளே, தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் நான் பங்கேற்று உரை நிகழ்த்தும் 8 பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பை வெளியிட்டேன்.