
சென்னை: துணை மின்நிலைய பணியாளர்கள் வேலை நேரத்தில் துணை மின்நிலைய வளாகத்தைவிட்டு வெளியே செல்ல கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உயர் அழுத்த துணை மின்நிலையங்களில் தொடர்ந்து மின்சார உபகரணங்களை கண்காணிப்பது, அவசர காலங்களில் விரைவாக செயல்பட்டு மின் வழித்தடங்களை சீரமைப்பது, மின்தடை நேரங்களில் உடனடியாக செயல்பட்டு மின்விநியோகம் வழங்குவது ஆகிய பணிகளை துணை மின்நிலைய பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.