
சென்னை: அகரம் விதையின் 15-ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, இயக்குநர்கள் ஞானவேல், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் பங்கேற்றனர். அகரம் மூலம் கல்வி பெற்ற பயனாளிகளும் தங்கள் அனுபவங்களை இந்த விழாவில் பகிர்ந்து கொண்டனர்.
விழாவை தொடங்கி வைத்த நடிகர் சூர்யா, “இது அகரம் விதையின் 15-வது ஆண்டு. கல்வியே ஆயுதம் என்பதுதான் அகரத்தின் நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கை நிஜம் ஆகியுள்ளது. கல்வியில் வெறும் படிப்பு மட்டுமல்லாது மாணவ, மாணவிகளுக்கு பண்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் பணியை அகரம் செய்து வருகிறது. இது மிகவும் சந்தோஷமான ஒன்று. அதை பகிரும் நாள்தான் இன்று. கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறை பேர் பட்டதாரிகளாக உருவாகி உள்ளனர்.