
சென்னை: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணையமாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருக்கக் கூடாது.