
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக டெலிகிராம் சேனல்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ வீரரும், லஷ்கர்-இ-தொய்பா செயல்பாட்டாளருமான தாஹிர் ஹபீப்பின் இறுதிச் சடங்கில் ராவல்கோட்டில் உள்ள கை காலா கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கூடியிருந்தனர்.