
புதுடெல்லி: “ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும்’’ என்று ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்தது.
இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, என்னை மிரட்டினார்.