
சென்னை: தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட கருணாநிதி நினைவு நாளில் உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: நான்காண்டு கால திமுக ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். தமிழகத்தின் உரிமைகளை காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்ச நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு.