
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.
முன்னதாக, கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ’உள்ளம் தேடி’ ’இல்லம் நாடி’, ’கேப்டனின் ரதயாத்திரை’ ’மக்களை தேடி மக்கள் தலைவர்’ ஆகிய பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயணத்தில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார்.